Thursday, January 21, 2010

நாணயம் - திரைவிமர்சணம்


ஒரு வங்கியை கொள்ளையடிப்பதை மையப்படுத்தி ஒரு திரைப்படம் இதுவரை தமிழில் எடுக்கப்படவில்லை என்பதால் இந்த படம் ஒரு தரப்பு ரைகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளிவந்திருக்கிறது. தமிழில் இதற்கு முன்னர் ஒரு வங்கியை புத்திசாலித்தனமாகவும் நகைச்சுவையாகவும் கொள்ளையடித்த பெருமை பாக்யராஜ் அவர்களையே சாரும் (படம்: ருத்ரா).

எவராலும் கொள்ளையடிக்க முடியாத வங்கியாக வடிவமைக்கப்பட்ட வன்கியின் ஒரு உயரிய பொறுப்பில் இருப்பவர் பிரசன்னா. அந்த வங்கியை கொள்ளையிடத் திட்டமிடும் வில்லனாக சிபிராஜ். இவர்களை சுற்றியே நகர்கிறது கதை.

முன்னமே திருமணமாகி விவாகரத்தான பெண்ணை காதலிக்கிறார் பிரசன்னா. இருவரும் கடற்கரையில் இருக்கும் போது முன்னாள் கணவன் வந்து தகறாறு செய்கிறான். இருவரும் மயக்கமானது போல் காண்பிக்கப்பட்டு ஒரு வீட்டில் சிபிராஜுடன் பிரசன்னா காண்பிக்கப்படுகிறார்.

காதலியின் முன்னாள் கணவனை பிரசன்னா கொன்றதாகவும் அவனுடன் சண்டையிட்ட போது புகைப்படமெடுத்து வைத்திருப்பதாகவும் கூறி சிபிரஜ் பிரசன்னாவை அவர் வடிவமைத்த வங்கி லாக்கரையே கொள்ளையடிக்கும் திட்டத்திற்கு உடன்படுத்தி கொள்கிறார். இதனிடையில் அவர்களீடமிருந்து தப்பும் முயற்சியும் நடக்கிறது.

இறுதியில் பிரசன்னா காதலியையும் வங்கியையும் காப்பாற்றினாரா? அல்லது சிபிராஜ் திட்டமிட்டபடி வங்கி கொள்ளையடிக்கப்பட்டதா? என்பதை நன்றாகத்தான் சொல்லியிருக்கிறார்கள்.

இருந்தாலும் திரைக்கதையில் பல இடன்களில் சறுக்கல்கள். இந்த நாணயம் A சென்டர் ரசிகர்களை மட்டுமே ஓரளவுக்கு திருப்தி படுத்தியிருக்கிறது. மற்ற சென்டர்களில் நிச்சயம் வெற்றி பெற இயலாது.

சிபிராஜ் வில்லனாக முயற்சித்திருக்கிறார். தந்தை அளவுக்கு நேர்த்தியாக முடியாவிட்டாலும், ஓரளவு பன்னியிருக்கிறார். இனி அவர் வில்லனாகவே முயற்சிக்கலாம்.

நாணயம் தயாரிப்பாளர் எஸ்.பி. சரணுக்கு கிட்டுமா?

3 comments:

சங்கர் said...

அச்சச்சோ, அப்போ வடை எதுவும் கிடையாதா ? :(

Anonymous said...

கதையைப்பாத்தா பாக்கணும்போலா இருக்கு.

Unknown said...

All the best