Sunday, January 31, 2010

கலைவாணர் என்.எஸ்.கே - நகைச்சுவை நாயகன் (1)


நவம்பர் 29 1908 நமக்காக என்.எஸ்.கே என்பவரை அவரின் தாயார் பெற்றெடுத்த நாள். தமிழ் சினிமாவின் நகைச்சுவை உலகின் நாயகனாக ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனோடு இந்த தொடரை துவக்குகிறேன்.

முதலில் வில்லுப்பாட்டுகாரனாக தனது கலைப்பயணத்தை தொடங்கிய இவர் பின்னர் சில நாடகங்களில் நடித்து நாடகக் கலைஞராக திகழ்ந்தார்.பின்னர் சொந்தமாக ஒரு நாடக கம்பெனியை துவக்கினார். தென்னிந்தியாவில் சினிமா புகழ் பெற துவங்கியபின் இவருக்கும் அதில் ஆர்வம் வரவே சினிமாதுரையில் நுழைந்தார்.

இவர் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 6 பேர். இரண்டு மூத்த சகோதரிகள் செல்லம்மாள், பாஞ்சாலி மற்றும் மூன்று இளைய சகோதரிகள் மகாலெஷ்மி, சுப்பம்மாள், மின்னம்மாள். மேலும் ஒரு இளைய சகோதரன் திரவியம். இவர் 5ம் வகுப்பு வரை மளையாளத்தை தாய்மொழியாக கொண்ட பள்ளியில் படித்து வந்தார்.

அவரின் குடும்ப வறுமை அவரது படிப்பை அத்துடன் நிறுத்தி விட்டது.பின்னர் ஒரு கடையில் மாதம் 5ரூ சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்தார்.பின்னர் கடயின் முதலாளி இவர் கடைக்கு தாமதமாக வருவதால் இவரை திட்டி சம்பளத்தை குறைத்து 4 ரூ மட்டும் கொடுத்து வேலையை விட்டு நீக்கினார்.

அதன் பின் நாடகத்துரையில் ஆர்வம் கொண்டு வீட்டிலேயே நடித்து பழகினார்.பின்னர் இவர் தந்தை இவரை ஒரு நாடகக் கம்பெனியில் சேர்த்து விட்டார். அதுவே அவரின் கலையுலகின் தொடக்கமாக அமைந்தது. 1924ல் இவரது பெயர் கிருஷ்ணனில் இருந்து என்.எஸ்.கிருஷ்ணனாக மாற்றப்பட்டது.

என்.எஸ்.கிருஷ்ணன் என்றால் "நாகர்கோயில் சுடலைமுத்து கிருஷ்ணன்". தனது ஊர் பேரான நாகர் கோவிலையும் தனது தந்தை பெயரையும் இணைத்தே இவர் இப்பெயரில் வழங்கப் பெற்றார்.

சில காலங்களுக்கு பின்னர் டி.கே.எஸ் நாடக குழுமத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இதன் பின்னர் இவரின் திரைவாழ்க்கை தொடங்கியது. அது பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.

(தொடரும்)

Saturday, January 30, 2010

படச்சுருள் - 30-01-2010

--> இந்த வாரம் 5 படங்கள் வெளிவந்திருக்கு தைரியம், கதை, கோவா, ஜக்குபாய், தமிழ்படம். பொங்கல் பட வரவால் திரையரங்குகள் குறவாகத்தான் கிடைத்திருக்கிறது போலும். அனைத்தும் குறந்த அளவு திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.


--> முக்கியமான விடயம் நம்ம தல அஜீத்தோட அசல் படம் வரும் வெள்ளிக்கிழமை 5ம் தேதி வெளிவருகிறது. இதற்கான முன்பதிவு மதுரையில் உள்ள திரையரங்குகளில் துவங்கி விட்டதாம். என்னை போன்ற தல ரசிகர்கள் உட்டுராதீங்க. நம்ம தல அஜீத்தோட படம் நிச்சயம் வெற்றி படமா அமையும்னு நம்புவோம். நம்ம தல படத்தோட ட்ரைலர் உங்களுக்காக




மற்ற ஊர்களில் நாளை முன்பதிவு துவக்கம். தமிழகத்தில் வெளியாகும் திரையரங்குகளின் விபரம்: http://www.starajit h.com/media_ display.php? id=1691
--> இன்னொரு செய்தி தல பத்திதான். நம்ம தல நடிச்சி வெளிவரப்போற இந்த அசல் படதுல கதை-திரைக்கதை-வசனம் டைடீல் கார்டுல 3 பேரோட பேர் வருதாம். அதுல நம்ம தலயோட பேரும் ஒன்னு. இப்படத்திற்கு யு/ஏ சர்டிஃபிக்கேட் கிடைத்துள்ளது.

--> ஜக்குபய் படத்தோட பிரீமியர் ஷோவுக்கு திரையுலக பிரபலங்கள் ரஜினி, கமல் உட்பட பெரிய பட்டாளமே சென்றிருக்கிறது. இது தயாரிப்பிலிருக்கும் போதே நெட்டிலும் ட்.வி.டி யிலும் வந்தது. அப்பவே பாக்க ஆளில்ல. தியேட்டர்ல?

--> தனுஷ் கௌரவ வேடத்தில் நடிக்கப் போகிறார். ஆமாம் சுப்ரமணிய சிவா இயக்கத்தில் எடுக்கப்படப் போகும் சீடன் படத்தில் இவர் ஒரு சிவ பக்தராக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம். இந்த படத்தில் இவர் ஹீரோ இல்லை. தனது பங்கு 20% மட்டும்தான் என பகிரங்கமாக அறிவித்து சுப்ரமணிய சிவாவுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார்.

-->ஆயிரத்தில் ஒருவன் படத்தின் திருட்டு வீ.சி.டி தெருத்த்ருவாக விற்பதாக நடிகர் கார்த்தி போலீசில் புகார் கொடுத்துள்ளார். அது பற்றிய விபரம்:

"எங்களின் இரண்டரை ஆண்டு கடும் உழைப்பு ஆயிரத்தில் ஒருவன். தமிழ் மக்கள் இந்தப் படத்தை 100 ரூபாய் செலவழித்து தியேட்டரில் போய் பார்க்க வேண்டும். 15 ரூபாய் செலவழித்து திருட்டு விசிடியில் பார்த்து விடாதீர்கள். திருட்டு வி.சி.டி.யில் பார்த்தால் கோடிக்கணக்கில் செலவழித்து படம் எடுத்துள்ள தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படும்.." என்றார்.