Friday, February 12, 2010

இசைத்தமிழ் - ஏ.ஆர். ரகுமான்(2)


இசைப்புயலின் இரண்டாவது தமிழ்ப்படம் "புதிய முகம்" (1993). இப்படத்தின் பாடல்களிலும் தனது முத்திரையை பதித்தார் ஏ.ஆர்.ரகுமான். இதில் சிறப்பு மிக்க விடயம் என்னவென்றால் வைரமுத்துவின் வரிகளில் இடம்பெற்ற "கண்ணுக்கு மை அழகு" பாடல் மலேசியாவில் உள்ள ஒரு பள்ளியில் பாடமாக வைக்கப்பட்டுள்ளதாம்.

* நேற்று இல்லாத மாற்றம் - சுஜாதா

* கண்ணுக்கு மை அழகு - பி.சுசீலா மற்றும் உன்னிமேனன்

* ஜூலை மாதம் வந்தால் - எஸ்.பி.பி, அனுபமா

* இதுதான் வாழ்க்கை என்பதா - சுஜாதா, உன்னிமேனன்

* சம்போ சம்போ - மால்குடி சுபா, மின்மினி

1993 ல் இவரின் அடுத்தப் படம் "ஜென்டில் மேன்". ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் இசைப்புயலின் இசை உலகெங்கும் மின்னியது. இத்திரைப்படத்தின் பாடல்களுக்காக ரகுமானுக்கு இரண்டு விருதுகள் கிடைத்தது.



1) சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழக அரசு விருது

2) சிறந்த இசையமைப்பாளருக்கான ஃபிலிம் ஃபேர் விருது

இப்படத்தின் ஒட்டகத்தை கட்டிக்கோ பாடல் .பி.பி.சி யின் ஃபேசன் சோவில் ஒலித்தது.

* என் வீட்டுத் தோட்டத்தில் - எஸ்.பி.பி, சுஜாதா

* உசிலம்பட்டி - சாகுல் ஹமீது, ஸ்வர்ணலதா

* சிக்கு புக்கு ரயிலு - சுரேஷ் பீட்டர்ஸ், ஜி.வீ. பிரகாஷ் குமார்(ரகுமானின் சகோதரி மகன், தற்போதைய இசையமைப்பாளர்)

* பார்க்காதே பார்க்காதே - மின்மிணி, நியோல் ஜேம்ஸ்

* ஒட்டகத்தை கட்டிக்கோ - எஸ்.பி.பி, ஜானகி

1993ல் இவர் ஒரு முழு நீள கிராமிய படத்திற்கு இசையமைத்து, பல போட்டியாளர்களின் கேள்விகளுக்கு பதிலடி கொடுத்தார். தன்னால் கிராமிய படங்களுக்கும் சிறப்பாக இசையமைக்க முடியும் என நிரூபித்தார். பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த உணர்வுகளின் வெளிப்பாடான கிழக்கு சீமையிலே படத்தில் இவர் இசைத்த "ஆத்தங்கர மரமே" பாடலும் உணர்வுகளின் வெளிப்பாடுதான்.


இன்றும் பலரால் ரசிக்கப்பட்டு நெஞ்சில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது இப்படத்தின் பாடல்கள். வைரமுத்துவின் வைரவரிகளில், இசைப்புயலின் இசையில் இப்படத்தின் பாடல்கள்.

* மானூத்து மந்தையிலே - எஸ்.பி.பி

* ஆத்தங்கர மரமே - மனோ, சுஜாதா

* கத்தால காட்டு வழி - ஜெயச்சந்திரன், ஜானகி

* எதுக்கு பொண்டாட்டி - சாகுல் ஹமீது, டி.கே.கலா, சுனந்தா

* தென்கிழக்கு சீமையிலே - சித்ரா, மலேசியா வாசுதேவன்

(தொடரும்)

2 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

கத்தால காட்டு வழி, பாடலும் அருமையான பாடல்தான்.

Anonymous said...

கண்ணுக்கி(கு)(இ)மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
அவரைக்கு பூ அழகு
அவருக்கு நான் அழகு