Saturday, January 23, 2010

இரண்டு தேசிய விருதுகள் பெற்றது நான் கடவுள்


இயக்குனர் பாலா. த்மிழ் சினிமாவின் போக்கையே மாற்றியமைத்து ஒரு புதிய வழிகாட்டுதலை ஏற்படுத்தியவர். அவர் இயக்கத்தில் வெளிவந்த நான் கடவுள் திரைப்படம் 2008ம் ஆண்டுக்கான தேசிய விருதுகளில் இரண்டு தேசிய விருதுகளை பெற்றுள்ளது.

நான் கடவுள் படத்தின் இயக்கத்திற்காக இயக்குனர் பாலாவுக்கு சிறந்த இயக்குனர் விருது அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் சிறந்த ஒப்பனை(மேக்கப்) கலைஞருக்கான விருது அதே நான் கடவுள் திரைப்படத்தின் கலைஞர் மூர்த்திக்கு கிடைத்துள்ளது.

இயக்குனர் பாலா சேது படத்தின் மூலம் அற்முகமாகி விக்ரம் என்ற நடிகனை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததோடில்லாமல், தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியமைத்து வித்தியாசமான படங்கள் வெளிவர ஆரம்பம் அமைத்து கொடுத்தவர்.விக்ரமை அடுத்து நடிகர் சூர்யாவிற்கு திரையுலகில் ஒரு புதிய யுத்தியை அமைத்து கொடுத்து அவரின் நடிப்பு திறமையை வெளிக் கொண்டு வந்தவர்.

இதனையடுத்து பாலாவால் செதுக்கப்பட்டவர் நடிகர் ஆர்யா.இவரும் நடிகை பூஜாவும் இணைந்து நடித்து வெளிவந்த படம்தான் நான் கடவுள். இப்படத்தின் மூலம் நடிகை பூஜா தேசியவிருது பெறுவார் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் கிடைக்கவில்லை. இருந்தாலும் இப்படத்திற்கு கிடைத்த இரண்டு விருதுகளும் திறமைக்கு கிடைத்தவை.



இப்படத்தின் நேர்த்தியான மேக்கப் மூர்த்திக்கு இந்த விருதை பெற்றுத் தந்துள்ளது. வாழ்த்துக்கள் பாலா மற்றும் மூர்த்தி.மேலும் 2008ன் சிறந்த தமிழ் படமாக "வாரணம் ஆயிரம்" அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த மூன்று விருதுகளும் தமிழ்திரையுலகினரின் திறமைக்கு கிடைத்தவை.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

2 comments:

டிராகன் said...

it is very very good news for me because i am a fan of bala .i think bala is Vittoria De'sicca ,federico fellini of Tamil Cinema,it is a pure NEOREALISM movie in tamil cinema what ever it be now only INDIAN GOVERMENT AWAKE!!!

Anonymous said...

good for tamil cinema